தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு?? முதல்வர் தீவிர ஆலோசனை!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் நவம்பர் 28ம் தேதி மருத்துவக் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் இதுவரை 774,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 11,655 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக 751,535 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆரம்ப நாட்களில் இருந்த கொரோனா பாதிப்பு விகிதம் தற்போது பாதிக்கு கீழாக குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Conference
Conference

தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், மேலும் அதிகப்படியான தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். அதில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here