தற்போது ஊரடங்கு நடவடிக்கை நடைமுறையில் இருந்து வந்தும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால் மாநில அரசு ஊரடங்கு உத்தரவினை வருகிற மே மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஊரடங்கு நடவடிக்கை:
இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தினால் மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா கட்டுக்குள் வராத காரணத்தினால் கோவா மாநில அரசு ஊரடங்கினை நீட்டித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கின் பொழுது அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே குஜராத்தில் உள்ள 36 நகரங்களிலும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி அஹமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 36 நகரங்களில் இந்த அறிக்கை பொருந்தும்.
தமிழகத்தில் மின் கட்டணம் ரத்து? எதிர்பார்ப்பில் மக்கள்!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் வருகிற மே மாதம் 28ம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர முழு ஊரடங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டிலே இருக்க வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.