தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்பரவால் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் மின் கட்டணம் ரத்து செய்யப்படுமா என்று தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஓர் உயிர்கொல்லியாக உருவெடுத்து பல்வேறு தரப்பு மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும் இந்த ஊரடங்கு வருகிற 24ம் தேதி உடன் முடிவுக்கு வரவுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அரசிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் மின் கட்டணம் செலுத்துவது சற்று சிக்கலான ஒன்று.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடும் வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை – கொண்டாட்டத்தில் நகை பிரியர்கள்!!
எனவே இதனை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களின் நலன் கருதி தமிழகத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்க அதிக வாய்ப்புள்ளதால் இதனை தமிழக அரசு அறிவித்தால் தமிழக மக்கள் மிகுந்த பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.