Wednesday, May 8, 2024

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்கள் – முதல்வர் திறப்பு..!!

Must Read

இந்த கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்து உள்ள நிலையில் தழைக்க அரசு சார்பில் புதிதாக 20,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ரொம்பவே அதிகமாக உள்ளது. இதனால், பலரும் வேலை இழந்து உள்ளனர். அதனால், தமிழக அரசு சார்பில் புதிதாக 20,000 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டு அதற்கு முயற்சிகளையும் செய்து வந்துள்ளது. அதில் 8 தொழில் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினர். மேலும், 5 திட்டங்களை நேரடியாகவும், 3 திட்டங்களை காணொளி காட்சி வாயிலாகவும் திறந்து வைத்தார்.

என்ன என்ன திட்டங்கள்:

கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலமாக பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

ரேஷன் கடைகளில் பொருள் வாங்கணும்னா இனி கைரேகை அவசியம்..!

  • கடலூரில், 300 பேருக்கு 350 கோடி முதலீட்டில் TATA Chemica திட்டத்தில் சிலிக்கா உற்பத்தி திட்டம். மேலும், 550 பேருக்கு வேலை வழங்கும் 47 கோடி முதலீட்டில் MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் Mahindra World City தொழில் பூங்காவில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பூங்காவில் 105 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.
  • திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.
  • இதுபோல், சுமார் 8 திட்டங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களின் மூலமாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும், மொத்த முதலீடு 2000 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -