இந்த கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்து உள்ள நிலையில் தழைக்க அரசு சார்பில் புதிதாக 20,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ரொம்பவே அதிகமாக உள்ளது. இதனால், பலரும் வேலை இழந்து உள்ளனர். அதனால், தமிழக அரசு சார்பில் புதிதாக 20,000 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டு அதற்கு முயற்சிகளையும் செய்து வந்துள்ளது. அதில் 8 தொழில் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினர். மேலும், 5 திட்டங்களை நேரடியாகவும், 3 திட்டங்களை காணொளி காட்சி வாயிலாகவும் திறந்து வைத்தார்.
என்ன என்ன திட்டங்கள்:
கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலமாக பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
ரேஷன் கடைகளில் பொருள் வாங்கணும்னா இனி கைரேகை அவசியம்..!
- கடலூரில், 300 பேருக்கு 350 கோடி முதலீட்டில் TATA Chemica திட்டத்தில் சிலிக்கா உற்பத்தி திட்டம். மேலும், 550 பேருக்கு வேலை வழங்கும் 47 கோடி முதலீட்டில் MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் Mahindra World City தொழில் பூங்காவில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பூங்காவில் 105 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.
- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.
- இதுபோல், சுமார் 8 திட்டங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களின் மூலமாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும், மொத்த முதலீடு 2000 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
M.com