ரேஷன் கடைகளில் பொருள் வாங்கணும்னா இனி கைரேகை அவசியம்..!

0

ரேஷன் கடைகளில் இனி மேல் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் கார்டில் முறைகேடு..!

தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரேஷன் பொருள் வாங்க சென்றால் ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வரும்.

இந்த நடைமுறையில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் அல்லது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் வேலை செய்கிறவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என யார் வந்து கார்டை காட்டினாலும் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க முடியும். இதுபோன்ற நடைமுறைகளால் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை இருந்தது.

கந்த சஷ்டி கவச விவகாரம் – கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம்!!

பயோமெட்ரிக் முறை அறிமுகம்..!

இதனால் பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்த நிலையில் முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை நேற்று முதல் ஜுலை27 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக பயோமெட்ரிக் மிஷன் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது. குடும்ப அட்டையில் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து பொருட்களை பெற்று செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here