தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசு வேலைக்காக காத்து இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு பலர் நாளுக்கு நாள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சி முடிவதற்குள் குரூப் 2a, தமிழ்நாடு போலீஸ் எஸ்ஐ தேர்வு என அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்ற ஆண்டு கட்டுமான நல வாரியத்தில் காலியாக இருந்த கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 17, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜனவரி 18,20 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
இந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்கு ஆக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் இது தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டின் எதிரொலி ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |