டி.ஆர்.பி (TRB) தேர்விலும் முறைகேடு..! மறுதேர்வு அறிவிப்பு..!

0

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இடைத்தரகர்களும், அரசு அதிகாரிகளையும் கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்திய டி.ஆர்.பி தேர்விலும் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

டி.ஆர்.பி நடத்திய பாலிடெக்னிக் தேர்விலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்லுாரிகளின் ஊழியர்கள் அமைப்பு சார்பில் நிறுவனர் பேராசிரியர் கார்த்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான 1,060 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, மதிப்பெண்களை திருத்தி முறைகேடு நடைபெற்று தேர்வு பெற்று உள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அவர்கள், பணம் வாங்கிய இடைத்தரகர்களை அணுகுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அவர்களை, அரசு பதவியில் சேர தடை விதிக்க வேண்டும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதைத்தொடர்ந்து கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவிக்கு, 2,331 பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிகளில் தரப்படும் அனுபவ சான்றிதழை, மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அடிப்படை கல்வி மற்றும் தகுதி சான்றிதழ்களை வைத்து மட்டும், விண்ணப்பங்களை ஏற்க வேண்டும். மேலும் மதிப்பெண் விபரங்களை, மற்றவர்கள் பார்க்கும் வகையில், வெளிப்படையாக வெளியிட வேண்டும். இந்த முறையிலும் முறைகேடு நடைபெறாமல் தடுக்க அரசு இந்த விதிகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here