மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடி கை பிடித்து உயர்த்தி விடும் அனைவரும் வெற்றி பெறுவார்கள் எனவும், ராகுல் காந்தி செல்லுமிடமெல்லாம் தோல்வியே கிடைக்கும் எனவும் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மேலும் அவர் ஸ்டாலின் காணும் கனவு கனவாகவே மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.
எல்.முருகன் பேச்சு:
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் “கடந்த 14ம் தேதியன்று சென்னை வந்த பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மீண்டும் அவர் வரும் 25ம் தேதி கோவைக்கு வரவிருக்கிறார்.
இந்தியாவில் உற்பத்தியை துவக்கும் ‘டெஸ்லா’?? எலான் மஸ்க் திட்டம்!!
மேலும் அவர், “இந்த தேர்தலில் பாஜக பலமான தாக்கத்தினை ஏற்படுத்தும். பாஜக மற்றும் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட கூட்டணியாகும். சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் இரட்டை இலக்கத்தில் அமர்வது உறுதி. இந்த தேர்தல் பாஜகவின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான தேர்தலாகும். மேலும் ஸ்டாலின் காணும் கனவு கனவாகவே போய்விடும். திமுக தேசிய வளர்ச்சிக்கு எதிரான கட்சி. எனவே மக்கள் அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்” எனவும் கூறினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து பேசிய அவர்., “திமுகவினர் இதற்கு முன்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தாமல் இப்போது மட்டும் நடத்துவது அவர்களது தேர்தல் நோக்கத்தையே காட்டுகிறது. தமிழகம் வந்த ராகுல் காந்தி ஸ்டாலின் பற்றி எதுவுமே பேசவில்லை. அவர் சென்ற இடமெல்லாம் தோல்வி மட்டுமே கிடைக்கும். பாஜக ஆட்சியில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும். விரைவில் திமுக கூட்டணி உடையவிருப்பதால் அவர்கள் அதிமுக கூட்டணியில் பிளவினை உண்டாக்க முயல்கின்றனர். திமுக புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தீண்டாமையை ஊக்கப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.