கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் மற்றும் நயன்தாராவை தொடர்ந்து தல அஜித் நிதியுதவி வழங்கி உள்ளார்.
தல அஜித்
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வருமானமும் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் மற்றும் நயன்தாரா போன்றவர்கள் நிதியுதவி செய்து உதவினர். அதை தொடர்ந்து தற்போது அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு மருந்துக்காக மத்திய, மாநில அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |