இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூ. 50 லட்சம் வழங்கினார்..!

0

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரண நிதி வழங்கி வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

கொரோனா தாக்கம்..!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

நிவாரண நிதி..!

அதன்படி பிரதமர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் நிதி அளித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்களான ரெய்னா, ரோகித் சர்மா, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, தவான், ரகானே, கவுதம் கம்பிர் போன்றோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாம் ஒருங்கிணைந்து நிற்கும்போது மிகவும் வலிமையடைவோம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here