பிரிட்டன் பிரதமர் போரிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
பிரிட்டன் பிரதமர் உயிருக்கு போராட்டம் ?
ஜான்சனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை (ஐசியூ) சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வென்டிலேட்டரில் மூலம் சிகிச்சை அளிக்கிறதாக தகவல்கள் வெளியானது. இச்செய்தியை அமைச்சரவை விவகாரத்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் மறுத்துள்ளார்., ஐசியூவில் பிரதமர் போரீசுக்கு வென்டிலேட்டரில் இல்லை ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தேசிய வானொலி நிலையமான எல்.பி.சி யிடம் மைக்கேல் கோவ் தொடர் என்று தெரிவித்தார்.
பிரதமர் மனைவிக்கு கொரோனா:
கொரோனா தாக்கிய முதல் உலகத் தலைவர்களில் ஒருவரான போரிஸ் ஜான்சன் மாறினார். அவர் தனிமைப்படுத்திக் கொண்டும் பலன் கிடைக்கவில்லை. எனவே, திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார், மேலும் அவருக்கும் கொரோனா தாக்கியிருந்தது. தற்போது அந்த அறிகுறிகளிலிருந்து மீண்டு வருகிறார்.
பிரிட்டனின் பாதிப்பு:
பிரிட்டன் நிலை பிரிட்டனில், 52,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 5,373க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில், போரிஸ் இப்படி ஒரு நிலையில் சிக்கி தவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |