தமிழகத்தில் நாளை பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதைத்தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தின விழாவும், 27 28 ஆம் தேதி வார விடுமுறையும் வரவுள்ளது. இப்படி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் ஜனவரி 26 குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதாவது ஜனவரி 26 ஆம் தேதி கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களை காண வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. மேலும் மோயர் பாயிண்ட், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகை ஆகியவற்றை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.