கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சத்திய ஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (ஜன.25) தைப்பூசம் என்பதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வடலூர் செல்ல தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கடலூர் to விழுப்புரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் (வ.எண்.06145) இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் நாளை (ஜன.25) முதல் 27 ஆம் தேதி வரையிலும் மூன்று நாட்களுக்கு, விழுப்புரத்திலிருந்து காலை 09.10 மணிக்கு [புறப்பட்டு கடலூருக்கு செல்லும் மறுமார்க்கமாக மாலை 5.10க்கு விழுப்புரத்திற்கு வந்தடையும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் விருத்தாச்சலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.., இந்த நாளில் அனுமதி கட்டணம் கிடையாது.., வெளியான சூப்பர் நியூஸ்!!!