இந்திய அணியின் இளம் ஜோடியான கே எல் ராகுல் – அதியா ஷெட்டி, ஹர்திக் பாண்டியாவின் திருமணத்திற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஜோடி
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதற்கான இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா தனது மனைவியான நடாசா ஸ்டான்கோவிக்கை காதலர் தினமான இன்று 2வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும், இவர்களது, திருமணம் உதய்பூரில் இன்று நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை இந்தியாவின் புது தம்பதியான கே எல் ராகுல் – அதியா ஷெட்டி ஜோடி மும்பை விமான நிலையத்திற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி: 2வது டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?? பிசிசிஐ முடிவு தான் என்ன??
இவர்கள் இருவரும், ஹர்திக் பாண்டியா-நடாசா ஸ்டான்கோவிக்கின் திருமணத்திற்கு செல்கிறார்களோ என்று கேள்வி தற்போது எழுந்து வருகிறது. மேலும், இன்று அதிகாலை விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடியும் விமானத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு ஜோடியும், ஹர்திக் பாண்டியா-நடாசா ஸ்டான்கோவிக்கின் திருமணத்திற்கு சென்றார்களா, இல்லை காதலர் தினத்தை கொண்டாட வேறு எங்கும் சென்றார்களா என்று தெரியவில்லை.
View this post on Instagram