தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பெரும்பாலனோர் தங்கி உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு நாளையும் (மார்ச் 1), நாளை மறுநாளும் (மார்ச்.2) கிளாம்பாக்கத்தில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, போளூர் ஆகிய ஊா்களுக்கு நாளை (மாா்ச் 1) 180 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் (மார்ச் 2) 240 சிறப்புப் பேருந்துகளும் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பயணிகள் TNSTC இணையதளம் மூலமாக புக் செய்தும் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஐயோ அது நா இல்ல.., யாரும் நம்பாதீங்க.., குமுறும் எதிர்நீச்சல் நடிகை.., வைரலாகும் வீடியோ பதிவு!!!