சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஜனனி என்கிற மதுமிதா. இந்நிலையில் இவர் நேற்று மது போதையில் கார் விபத்தில் சிக்கியதாக அனைத்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. மேலும் அதில் அவர் குடித்துவிட்டு போலீஸ் ஒருவர் மீது காரை மோதியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த போலீஸ் சீரியஸான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் இதற்கு சீரியல் நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினேன் என்பது முற்றிலும் பொய்யானது. சில செய்தி நிறுவனங்கள் பேருக்காக இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் விபத்து நடந்தது என்னவோ உண்மைதான். இதனால் எனக்கும் அந்த போலீசுக்கும் லேசான அடிதான் ஏற்பட்டது. மேலும் இவர்கள் சொல்வது போல் அந்த போலீஸ்கார் சீரியஸாக இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.