தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்களாகவும், அந்த வாரங்களில் வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வருவதால் எங்களுக்கு போதிய விடுமுறை கிடைப்பதில்லை. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக எங்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஆலோசனை நடத்தி சரியான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.