முக்கனிகளில் ஒன்றான பலா பழத்தில் அளவற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. நம்மில் பலர் அதை ஒரு பழமாக மட்டுமே சாப்பிட்டு இருப்போம். ஆனால் கேரள மாநிலத்தை பொறுத்தவரை அதில் பல்வேறு வகை டிஷ்களை செய்யலாம். இனிப்பு மற்றும் காரம் என பல வித டிஷ்களை செய்யலாம். அதில் ஒன்று தான் சக்கை வரட்டி. அதை எவ்வாறு செய்யலாம் என இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
பலாப்பழம் – 15 சுளைகள்
வெல்லம் – 150 கிராம்
சுக்கு பொடி – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
கொட்டை எடுத்து சுத்தம் செய்து கொண்ட பலா சுளைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த சுளைகளை ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விட வேண்டும். இதையடுத்து வேக வைத்த பலா சுளைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் இடித்த வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும். இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மசித்து வைத்த பலா பழத்தின் கலவை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.
ஓரளவிற்கு கெட்டி பதத்திற்கு வந்ததும் அதில் வெல்ல பாகை சேர்த்து கிளறி கொள்ளவும். அதன் பின்னர் தண்ணீர் வற்றி அல்வா பதத்திற்கு வரும் வேளையில் சுக்கு பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு சிறிதளவு நெய் ஊற்றி இறக்கி விடவும். தற்போது மணமான சுவையான தித்திப்பான சக்கை வரட்டி ரெடி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்