இன்றைய காலகட்டத்தில் மதம் மாறி காதலித்து வரும் காதலர்களை இனப்படுகொலை செய்யும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் ஆலுவா அருகே ஒரு தந்தை தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அபிஸ் முகமது என்பவர் தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வகித்து வருகிறார்.
அவரின் மகள் பள்ளியில் படிக்கும் வேறு மதத்தை சேர்ந்த வாலிபனை காதலித்து வந்ததாகவும், அதனால் அந்த தந்தை தனது மகளை இரும்பு கம்பியால் அடித்து, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.