அண்டை மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. அடுத்தது தமிழகமா?? நிபுணர்கள் கவலை!!!

0

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு நாட்களில் தினசரி சராசரியாக 11 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. அதே சமயம் கேரளாவின் தொற்று எண்ணிக்கை அனைவருக்கும் கவலை அளிக்கும் வண்ணம் அதிகரித்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி கடந்த 1 வாரமாக அன்றாடம், சராசரியாக 11 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை நாட்டின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 20 சதவீதமாக உள்ளது.

மேலும் செரோ சர்வே ஆய்வு தரவுகளின் படி அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் எண்ணிக்கையில் சுமார் 11 விழுக்காடு மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து நோய் தொற்று எண்ணிக்கை அங்கு அதிகரிப்பதற்கான காரணம் உறுதியாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கேரளாவில் பத்தனம்திட்டா மற்றும் பாலக்காட்டின் உருமாறிய டெல்டா வைரஸ் பரவியுள்ளதால் அங்கு மும்மடங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் அதிகரித்துள்ள தொற்று பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அண்டை மாநிலத்தை தாக்கும் அபாயம் இருப்பதால் தமிழகமும், கர்நாடகாவும் கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அண்டை மாநிலத்தால் நோய் பரவும் அபாயம் பெரிதளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here