கைதி இரண்டாம் பாகத்திற்கு தடை …!கொல்லம் நீதிமன்றம் அதிரடி!!!

0

நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் உருவான படம் கைதி. இது மிகுந்த வரவேற்பு மற்றும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடைய கதை என ராஜீவ் ரஞ்சன் அளித்த புகாரின் அடிப்படையில் கொல்லம் நீதிமன்றம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கவும், பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் தடை விதித்து உள்ளது.

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் கைதி. இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானது. இந்த திரைப்படம் பலரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் மிகுந்த வெற்றியை பெற்றது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதையும் எஸ் ஆர் பிரபு அவர்களே தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதாவது, ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் சிறையில் இருந்த கதையை படமாக எடுக்க நினைத்து 2007ஆம்  ஆண்டு கதையை தயாரிப்பாளர்  எஸ் ஆர் பிரபுவிடம் கூறியதாகவும், அதற்கென முன்பணமாக 10,000 வழங்கியதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் சமீபத்தில் இந்த கைதி படத்தை பார்த்த போது தான், இது தன்னுடைய கதையின் இரண்டாம் பாகத்தை கைதி என்ற பெயரில் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால்  எஸ் ஆர் பிரபு மீது வழக்கு போட்டதாக கூறியுள்ளார் . மேலும் நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை வழங்க வேண்டும் எனவும்  கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கேரளாவின் கொல்லம் விசாரித்த நீதிமன்றம் கைதி படத்தின் இரண்டாம் பாகம்  தயாரிக்கவும் , பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here