விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டவர்கள் சிலர் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து கேரளாவில் சச்சின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்:
டெல்லியில் சுமார் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் ரிஹானா உட்பட பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரிஹானைவின் கருத்துக்கு இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது எதிர்ப்பை தெரிவித்து தனது கருத்தை தெரிவித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ரிஹானா கூறிய கருத்துக்கு சச்சின் கூறியதாவது, இந்தியாவை ஒற்றுமையை சீர் குலைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். தற்போது இவரது கருத்தினால் கேரளா மாநிலத்தில் உள்ள இளைஞர் காங்கிரஸ் ஆத்திரமடைந்தனர். மேலும் சச்சினுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
#INDvsENG டெஸ்ட்டில் ஹர்பஜன் ஸ்டைலை பந்து வீசிய ரோஹித் – வைரலாகும் வீடியோ!!
மேலும் சிலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தும் வருகின்றனர். தற்போது கேரளா மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சச்சினுக்கு எதிராக அவரது கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.