தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தனது கொழுக் மொழுக் உடலாலும் சிறந்த நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கிறங்கடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.
மெலிந்துபோன கீர்த்தி சுரேஷ்
தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சண்டக்கோழி, தானா சேர்ந்த கூட்டம், சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது போக மலையாளம் மற்றும் தெலுங்கிலும் பேசப்படும் நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி தந்தது. இவரது நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.
கடைசியாக இவர் நடித்து வெளியான மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. ஆனால் தமிழில் தற்போதைக்கு இவருக்கு புதிய படங்கள் கைவசம் இல்லை.
தற்போது கொரோனா ஊரடங்கின் போது உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே பரிதாபமாக காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ்.
நல்ல கொழுக் மொழுக் தோற்றத்தில் இவரை ரசித்த ரசிகர்கள் மெலிந்த தோற்றத்தில் இவரை பார்க்க கூடாமல் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் கோவிலில் நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல லைக்ஸ்கள் குவிந்தாலும் கீர்த்தி சுரேஷின் மெலிந்த தோற்றத்தை கண்டு ரசிகர்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.