அரசின் விதிகளை பின்பற்றவில்லை எனில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் – அமைச்சர் எச்சரிக்கை!!!

0

கர்நாடகாவில் கடந்த திங்கள் முதல் ஊரடங்கில் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில வருவாய் துறை அமைச்சர் R.அசோகா, மக்கள் மாநில அரசின் விதிகளை தளர்வுகளின் போது ஒழுங்காக பின்பற்றவில்லையென்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளது. கடந்த திங்கள் கிழமை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் Unlock 3.0 அதாவது மூன்றாம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது.

அந்த தளர்வுகளின்படி, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் உள்ள ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தற்போது அம்மாநில வருவாய் அமைச்சர் R.அசோகா மாநில அரசு அறிவித்த ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here