சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சில திட்டங்களை முன் வைத்தார். அதில் டயாலிசிஸ் மையங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில கருத்துக்களை கூறினார். அதாவது இன்னும் சில நாட்களில் டயாலிசிஸ் மையங்களின் எண்ணிக்கை 169 ல் இருந்து 219 ஆக உயர்த்தப்படும்.
அதுமட்டுமின்றி டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கை 649 ல் இருந்து வரும் நிலையில் 800 ஆக உயர்த்தப்படும். மேலும் மல்டி யூஸ் டயாலிசர்களுக்குப் பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டயாலிசர்கள் அமைக்கப்படும். குறிப்பாக 57 புதிய தாலுகாக்களில் 48 சமூக சுகாதார மையங்களில் புதிய மையங்கள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.