தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி எல்லாம் புதுசு தான்…, கல்வித் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி எல்லாம் புதுசு தான்..., கல்வித் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி வங்கக்கடலில் நிலை கொண்ட மிக்ஜாம் புயலானது தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. இந்த தாக்கத்தில், இருந்து மக்கள் மீள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகம், சீருடைகள் வழங்க  வேண்டும் என சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here