கொரோனா தொற்றுக்கு இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் தற்போது தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர்
நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் மிக கடுமையாக பாதித்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு சுமார் 1.60 கோடியை நெருங்கியுள்ளது. இதனால் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினார். இவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கலாம் – மத்திய அரசு அதிரடி!!
இதனை தொடர்ந்து அவர் மணிபால் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்பு அவர் தற்போது கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் முதல்வர்.