ராஜா ராணி 2 – நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அர்ச்சனா! சந்தியாவின் நிலை என்ன?

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியா சிவகாமி உடன் ஊருக்கு செல்வதாக ஒத்துக்கொள்கிறார். இதனால் சரவணன் என்ன நடக்க போகிறதோ என்று பயந்துகொண்டுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் இத்தனை நாட்கள் சரவணன் சந்தியா மீது கோவமாக இருந்தார். சந்தியா எப்படியோ சரவணனை சமாதானம் செய்கிறார். மேலும் சந்தியாவிற்கு காலேஜில் பாராட்டு விழா நடந்த ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் அந்த பாராட்டு விழாவுக்கு போகாமல் சிவகாமியுடன் ஊருக்கு கிளம்புகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் டிரஸை எல்லாம் எடுத்து வைக்கின்றனர். சரவணனிடம் அங்கு இருப்பவர்கள் எல்லாம் எப்படி என்று கேட்கிறார் சந்தியா. சரவணன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார். ஏனெனில் அங்கு இருப்பவர்கள் எல்லாரும் அப்படி பட்டவர்கள். சிவகாமியை விட பல மடங்கு பேசுபவர்கள்.

அவர்களை எல்லாம் சந்தியா எப்படி சமாளிக்க போகிறார் என்ற பயத்தில் உள்ளார் சரவணன். அடுத்ததாக அனைவரும் கிளம்புகின்றனர். அப்பொழுது அர்ச்சனா வீட்டிற்கு வருகிறார். வீட்டை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறார் சிவகாமி. ஊருக்கு வந்ததும் வீட்டிற்கு செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறுகின்றனர்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன யாஷிகா – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!!

ஆட்டோவில் சந்தியாவின் சேலை சரவணனின் மேல் பட ‘அய்யய்யயோ’ சாங் ஒலிக்க ஆட்டோவில் ஒரே ரொமான்ஸ் தான். மேலும் இதனை பார்த்து சிவகாமி முறைக்க சிவகாமியின் சேலை ரவி மேல் பட அதுவும் ரொமான்ஸ் சீனாக மாற ஒரே காமெடியாக இருந்தது.

அடுத்து சிவகாமி தனது மாமியாரை பார்க்க போவதால் ஒரு பதட்ட நிலைமையிலேயே இருக்கிறார். தன் கணவரிடம் உங்க அம்மா கொஞ்சமாச்சும் மாறி இருப்பாங்களா?? என்று கேட்கிறார். அதற்கு அவர் காலையில் எங்க அம்மா குரலை கேட்டபோது அதே கம்பீரம் இருந்தது என்று சொல்கிறார்.

இதனால் சிவகாமி மேலும் பதட்டமடைகிறார். அடுத்தடுத்து கோவில், தோப்பு என பார்த்து அங்கு நடப்பவற்றை பார்த்து பயப்படுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here