சுஷாந்த் சிங் தற்கொலை செய்ய இதுதான் காரணம் – கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டு..!

0
Kangana Sushnant
Kangana Sushnant

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொள்ள இதுதான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தற்கொலை:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்ததற்கு தூக்கிட்டுக் கொண்டது தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 34 வயதான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும், எனவே இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Kangana Video
Kangana Video

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்?

10-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!

அதே போல் என்னுடைய படைப்புகளையும் ஆதரிக்க மறுப்பது ஏன்? சமூக வலைதளங்களில் சுஷாந்த் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை முன்வைக்கப்பட்டு வந்தன. திறமை இல்லை என தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு’ என தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here