தற்போது விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிலளித்திருந்தார். தற்போது அந்த டிவீட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
கங்கனா ரனாவத்:
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போரட்டம் குறித்து வெளிநாட்டவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் டெல்லியில் தற்போது இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை சுட்டி காட்டியும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமேரிக்கா பாப் பாடகி ரிஹானா பதிவிட்ட டீவீட்டினால் பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. இவரது டீவீட்டுக்கு பல பிரபலங்கள் எதிர்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் பாலிவுட் நடிகை ரிஹானாவின் கருத்துக்கு கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார். அவர் ரிஹானாவை பார்த்து முட்டாள் என்றும், இங்கு போராடுவது விவசாயிகள் அல்ல, இந்தியாவை பிரிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய டிவீட்களை தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் கடந்த 2 மணி நேரத்தில் கங்கனா ரனாவத்தின் 2 டிவீட்கள் நீக்கப்பட்டுள்ள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் – கிரேட்டா தன்பெர்க் மீது வழக்குப்பதிவு!!
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோஹித் சர்மா குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். மேலும் சுற்று சூழல் ஆய்வாளர் கிரேட்டா தன்பேர்க்கை எலி என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தற்போது ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இவர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்திருந்ததால் அவரது ட்விட்டர் கணக்கு இடைக்கலமாக முடக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.