பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தற்போது மஞ்சள் வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில், கடந்த மாதம் அவர் பைக் வீலிங் செய்ய முயற்சித்து கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து ஜாமீன் கேட்டு வாசன் மனு கொடுத்த நிலையில், அதனை நீதிமன்றம் மறுத்து மேலும் 15 நாட்கள் சிறையில் உத்தரவு பிறப்பித்தது மட்டுமின்றி அவருடைய ஓட்டுநர் உரிமையை 10 ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காஞ்சிபுரம் நீதிமன்றம் 3வது முறையாக 5 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து வருகிற அக்.30ம் தேதி வரை டிடிஎஃப் வாசனை புழல் சிறையில் அடைக்க உத்தரவு அளித்துள்ளனர்.
அர்ஜுன் ஜோலி முடிஞ்சிருச்சு., தமிழ் வைத்த சரியான ஆப்பு., அனல்பறக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்!!