என்ன மனுஷன்யா இவரு…, டேவிட் வார்னரின் செயலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!

0
என்ன மனுஷன்யா இவரு..., டேவிட் வார்னரின் செயலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!
என்ன மனுஷன்யா இவரு..., டேவிட் வார்னரின் செயலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இன்று (அக்டோபர் 16) முதல் வெற்றியை எதிர்நோக்கி இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லக்னோவில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து,இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க (61) மற்றும் குசல் பெரேரா (78) களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்திருந்தன.

Enewz Tamil WhatsApp Channel 

இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் பெவிலியன் திரும்ப, குசல் மெண்டிஸ் 9, சதீர சமரவிக்ரம 8, தனஞ்சய டி சில்வா 7, துனித் வெல்லலகே 2, சாமிக்க கருணாரத்ன 2 என சொற்ப ரன்களில் வெளியேறினர். இதில், கேப்டன் குசல் மெண்டிஸ் விக்கெட்டை டேவிட் வார்னர் அருமையான கேட்ச் பிடித்து கைப்பற்றினார். இந்த போட்டியின் நடுவே, சற்று மழை குறுக்கிட்ட போது, மைதான ஊழியர்களுக்கு அட்டையை தரையில் வைக்க எவ்வித தயக்கமுமின்றி உதவி உள்ளார். இவரது இந்த செயல் ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில், இலங்கை அணியானது 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மட்டுமல்ல இந்த 5 விளையாட்டுகளும் சேர்ப்பு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here