தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சொத்து முழுவதையும் அர்ஜுனுக்கு விட்டுக்கொடுத்த கோதை தன் மகன் தமிழுடன் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். மேலும் சரஸ்வதியின் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அர்ஜுன் தோல்வி அடைகிறார். அதனால் அடுத்து தமிழில் பேக்டரியில் தனது ஆட்களை வைத்து தீப்பிடிக்க வைக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தனது தொழிலை வளர்த்து வந்த தமிழுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுகிறது. இப்படி இருக்கையில் எப்படி தனது தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது என புரியாமல் தமிழ் இருக்கிறார். ஆனால் வரும் எபிசோடில் தனது பேக்டரியில் தீ பிடிக்க அர்ஜுன் தான் காரணம் என தமிழுக்கு தெரிய வருமாம். மேலும் இதுவரை பொறுமையாக இருந்த தமிழ் அர்ஜுன் மண்ணை கவ்வும் அளவிற்கு ஒரு தரமான பிளான் போடுவாராம். அப்படி தமிழ் வைக்கும் சிறப்பான ஆப்பால் அர்ஜுன் ஜோலி முடிந்து விடுமாம். மேலும் ராகினியிடம் கையும் களவுமாக மாட்டி கொள்வாராம்.