இன்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருது தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பதிவிட்டு உள்ள அவர் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நீண்ட உரை மட்டுமே இருந்ததாகவும், ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சரியான தீர்வுகள் இல்லை எனவும், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது” என தனக்கே உரித்தான ஸ்டைலில் ஒரு ஹைக்கூ விமர்சனத்தின் மூலம் கிண்டல் செய்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |