வீட்டின் தரத்தை பற்றி பேசி மாட்டிக்கொண்ட உலக நாயகன்.., வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வாரத்தில் நடந்த விஷயங்களை வைத்து போட்டியாளர்களுக்கு டோஸ் கொடுப்பார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவை நிக்சன் வாடி,போடி,கருமம், பொண்ணா இவ என்று கூறி இனி வினுஷாவை பற்றி பேசுனீங்கனா சொருகிடுவேன் என்று பயங்கரமாக பேசினார்.
இதனால் கடந்த சனிக்கிழமை அவருக்கு மஞ்சள் கார்டு கொடுத்தார்.மேலும் இந்த வீட்டின் தரம் எப்படி இருக்கணும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று பேசி இருந்தார். தற்போது இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது இந்த ஷோ ஆரம்பித்ததில் இருந்து பூர்ணிமா, மாயா மற்றும் நிக்சன் ஆகியோர் கெட்ட வார்த்தைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசியுள்ளனர். அதுமட்டுமின்றி கமலை கூட கலாய்த்து பேசியுள்ளனர்.அப்போது வீட்டின் தரம் தெரியவில்லையா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here