அப்பாடா ஒரு வழியா கெடச்சாச்சு…,ரஜினி & நெல்சனை அடுத்து அனிருத்தை கவனித்த தயாரிப்பு நிறுவனம்…,

0
அப்பாடா ஒரு வழியா கெடச்சாச்சு...,ரஜினி & நெல்சனை அடுத்து அனிருத்தை கவனித்த தயாரிப்பு நிறுவனம்...,
அப்பாடா ஒரு வழியா கெடச்சாச்சு...,ரஜினி & நெல்சனை அடுத்து அனிருத்தை கவனித்த தயாரிப்பு நிறுவனம்...,

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் ‘ஜெயிலர்’ படத்தை தயாரித்திருந்தார். இப்போது, ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் சந்தித்து காசோலை மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில், ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு சம்பளத்துடன் கார் பரிசாக வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதே போல, ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றிய அனிருத்திற்கு பரிசு வழங்கப்படவில்லை என்று இணையத்தில் பல மீம்ஸ்கள் வெளியாகி வைரலானது. இதையடுத்து, இன்று அனிருத்தை சந்தித்த கலாநிதி மாறன் அவருக்கு காசோலையுடன் Porsche காரையும் பரிசாக வழங்கி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here