காபூல் வான்வழியில் விமானங்கள் நுழைய தடை.. கேள்விக்குறியாகிய இந்தியர்களின் பாதுகாப்பு!!

0

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தற்போது தாலிபான்களின் கைவசம் வந்த நிலையில் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து விமானங்களும் காபூல் வான்வழியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக தாலிபான்கள் நடத்திய போரின் முடிவில், தற்போது அந்நாட்டின் பல மாநிலங்களை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதிபர் அஸ்ரப் காணியும் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

அங்கு இருக்கும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் தூதரக ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் இந்திய அரசும் தங்கள் நாட்டின் மக்களை இந்தியாவிற்கு அழைத்து வருகிறது. நேற்று மட்டும் 129 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் காபூல் சென்று இந்திய மக்களை அழைத்து வர இருந்தது.

ஆனால் இந்த நேரம் மாற்றப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் காபூல் செல்வதாக உறுதியானது. ஆனால் தற்போது காபூல் வான்வழியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் இந்தியர்களை தற்போது மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here