மௌன ராகம் 2 – சக்தி, வருண் திருமண விஷயம் தெரிந்து வீட்டை விட்டே வெளியேறும் மல்லிகா!!

0

மௌன ராகம் சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மல்லிகாவிற்கு சக்திக்கு திருமணம் நடந்த விஷயம் தெரிய வருகிறது. இதனால் வீட்டை விட்டே வெளியேறுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் தற்போது மல்லிகா வீட்டிற்கு வந்ததில் இருந்து சக்தியின் செய்கைகள் எதுவும் சரியாக படவில்லை. எதோ ஒரு பிரச்சனை இருப்பதாக நினைத்து கொள்கிறார். தனக்கு திருமணம் ஆன விஷயத்தை மறைக்க அவ்வளவு பாடுபட்டு வருகிறார்.

ஷீலாவிற்கு எதுவும் பிடிக்கவில்லை. சக்தியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பல வேலைகளை செய்து வருகிறார். தன் அண்ணனின் மகன்கள் நன்றாக இருக்க கூடாது என்று சக்தியை பழி வாங்குகிறார்.

இந்நிலையில் தற்போது சக்தியை பார்க்க கார்த்திக்கும் அவரது அம்மாவும் சக்தியை பார்க்க வருகின்றனர். அப்பொழுது பார்த்து மல்லிகா பார்த்து விடுகிறார். சக்தியை அவர்கள் பார்த்து விட்டால் என்ன பிரச்சனை நடக்குமோ என்று பயப்படுகிறார். மேலும் சக்தி தன் பாட்டிக்காக ஒரு பாடலை பாட வருணுக்கு இது புதிதாக உள்ளது.

அப்படியே அசந்து போயி நிற்கிறார். இதனால் கடுப்பாகும் ஷீலா இவங்க எதுக்கு இங்க வந்து இருக்காங்க என்று யோசிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது. இந்நிலையில் இனி வரும் காட்சிகள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இத்தனை நாட்கள் சக்தி தாலியை மறைத்து வைத்திருக்க அதனை மல்லிகா பார்த்து விடுகிறார். சக்தி எவ்வளவு சமாதானம் சொல்லியும் மல்லிகா கேட்காமல் வீட்டை விட்டே வெளியேறுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here