உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு, ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டுள்ளதால், பிசிசிஐ அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்கள்
இந்திய அணியானது வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. தற்போது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தும் இந்திய அணி வீரர்கள், இந்த தொடர் முடிவடைந்ததும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தங்களது பயிற்சியை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கு தேர்வாகி உள்ள இந்திய வீரர்கள் காயம் ஏற்படாதவாறு ஐபிஎல் விளையாட வேண்டும் என பிசிசிஐ உட்பட பல தரப்பில் முன்னரே அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும் அவ்வப்போது விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வரும் கே எல் ராகுல், RCB அணிக்கு எதிரான போட்டியில் தொடை தசை பகுதியில் பலத்த காயம் அடைந்துள்ளார். இவரை போல, ஐபிஎல்லுக்கான போட்டியில் பயிற்சியில் ஈடுபட்ட போது இடது தோளில் ஜெய்தேவ் உனத்கட் காயம் அடைந்துள்ளார்.
கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய வெற்றி…, சாம்பியன் அணியை வீழ்த்தி டெல்லி அசத்தல்!!
இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து இவர் விலகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரு வீரர்களும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த இரு வீரர்களையும் பிசிசிஐ தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், CSK அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், கே எல் ராகுல் விலகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.