உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா சில மாதங்களாக கட்டுக்குள் வந்துவிட்டது என நிம்மதியா அடைந்தோம். ஆனால் இப்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் தீவிரமெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் இப்போது உருமாற்றம் அடைந்து தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் எல்லாரும் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் JN 1 என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் இந்த புதுவகை வைரசால் நாம் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.