கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி. திருநெல்வேலி உள்ளிட்ட தமிழக தென் மாவட்டங்களின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆறு உட்பட பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி. கல்லூரிகளுக்கு இன்று (டிச. 18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “இன்னும் 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலியில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.” என கூறியுள்ளார். மேலும் மழையின் தன்மையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை வழங்குவது குறித்து கலெக்டர் அறிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ஆருத்ரா மோசடி வழக்கு.., ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!!