ஆருத்ரா மோசடி வழக்கு.., ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

0
ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.
ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கும் சம்பந்தம் உள்ளது என தயாரிப்பாளரும் நடிகருமான ரூசோ கூறிய நிலையில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் பலமுறை சம்மன் அனுப்பிய நிலையில் ஆர்கே சுரேஷ் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆர் கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆருத்ரா மோசடி வழக்கு பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.
அதன் பின் போலீசார் ரூசோவிடம் போட்ட பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வருமாறு தெரிவித்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இவரிடம் ஏதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றால் புதிதாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here