ஆசிய விளையாட்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர்…, அதுவும் குறைந்த பந்தில் நிகழ்ந்தி அபாரம்!!

0
ஆசிய விளையாட்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர்..., அதுவும் குறைந்த பந்தில் நிகழ்ந்தி அபாரம்!!
ஆசிய விளையாட்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர்..., அதுவும் குறைந்த பந்தில் நிகழ்ந்தி அபாரம்!!

இந்திய கிரிக்கெட் அணியானது ஆசிய விளையாட்டு போட்டியில் தனது முதல் காலிறுதி போட்டியில் நேபாளம் அணியை எதிர்த்து இன்று (அக்டோபர் 3) போட்டியிட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுக்க, நேபாள அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய அணி அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த போட்டியில், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரிஸ், 7 சிக்ஸர்கள் என சதம் (100) அடித்து அசத்தினார். இதன் மூலம், ஆசிய விளையாட்டு வரலாற்றில் நேபாளத்திற்கு எதிராக 47 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். குறைந்த பந்துகளில் டி20யில் சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் தட்டி சென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா…, 23 ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்திய அசத்தல்!!

டி20யில் இந்திய வீரர்களின் அதிவேக சதம்:

  • ரோஹித் சர்மா – 35 பந்துகள்.
  • சூர்யகுமார் யாதவ் – 45 பந்துகள்.
  • கே எல் ராகுல் – 46 பந்துகள்.
  • சூர்யகுமார் யாதவ் – 48 பந்துகள்.
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 48 பந்துகள்*.
  • சூர்யகுமார் யாதவ் – 49 பந்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here