இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்கள் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐயானது சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அணியில், கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா இடம் பெற்றுள்ளார். ஆனால், இவர் விளையாட வேண்டும் என்றால், உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில், இந்தியாவின் உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாட வேண்டும் என பிசிசிஐயானது கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், ஜடேஜா ரஞ்சி கோப்பையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியா…, நியூசிலாந்துக்கு எதிராக பலபரீட்சை!!
இவரை தொடர்ந்து, பிசிசிஐயானது பும்ராவுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பும்ராவும் சர்வதேச இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பும்ராவை அவசரப்படுத்தியவாறு, எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயார்படுத்தும் வகையில், இவ்வாறு கட்டுப்பாடு விதித்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.