ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மும்பையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசிய போட்டோக்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
வைரல் போட்டோ:
நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கேரியரில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் இயக்கி வெளியிட்ட ஆல்பம் பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், அதிகமாக வருமான வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை தந்தை சார்பாக இவர் பெற்றுக் கொண்டார்.
அந்த சமயத்தில், மும்பையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசினார். இது குறித்த பதிவிட்ட அவர் உங்களுடன் காபி அருந்துவது, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது அற்புதமாக இருந்தது என பதிவிட்டார். ஏற்கனவே, தனுஷ் அந்தராங்கி ரே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் மாஸ் காட்டி வரும் நிலையில், கணவரது ரூட்டை பின்பற்றி ஐஸ்வர்யா பாலிவுட்டில் அறிமுகமாக போகிறாரோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்