இந்தியாவில் விஸ்வரூபமெடுக்கும் குரங்கு அம்மை நோய் – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு!

0
இந்தியாவில் விஸ்வரூபமெடுக்கும் குரங்கு அம்மை நோய் - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு!

உலகத்தில் உள்ள சில நாடுகளில் நாளுக்கு நாள் குரங்கு அம்மை நோய் அதிகரித்து கொண்டு வருகிறது.  இந்தியாவில் அதற்காக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

குரங்கு அம்மை நோய்:

உலகத்தில் கொரோனாவின் தாண்டவத்தை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோயும் கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவை இருக்கக் கூடும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த நோயின் அறிகுறிகள் தோன்றி 5 நாட்களுக்குள் உடலில் சிவப்பு நிற புள்ளிகள், கொப்புளங்கள் தோன்றும். அமெரிக்கா, ஐரோப்பியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிக தீவிரமாக இத்தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் மெல்ல மெல்ல குரங்கு அம்மை நோய் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

மத்திய அரசும் நாட்டில் தடுப்பு நடவடிக்கைளை தீவிரிப்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து புதுதில்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இருக்கும் நாடுகளில் குரங்கு அம்மை நோய் குறைவாக காணப்படுகிறது. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் நோய் ஏற்பட்டவர்களில் பத்தில் ஒருவர் இறக்க நேரிடும் என்றும் முறையான சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here