தமிழகத்தில் புது ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்.., அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு!!!

0

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த சலுகைகளை பெற ரேஷன் கார்டு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டை தொலைத்தவர்கள் போன்ற பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு மகளிர் உரிமை தொகைக்காக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்னும் பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதனால் தேர்தல் விதிகளின்படி புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த உடன் புதிய ரேஷன் கார்டு வழக்கம் போல் விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here