தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நடைபெறும் முக்கிய திருவிழா நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 25) பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற இருப்பதால், நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருந்தாலும் பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 6ஆம் வேலை நாளாக கருதப்படும் என தெரிவித்துள்ளனர்.