இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளால் “சந்திரயான் 3” விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்த முதல் விண்கலம் என்ற பெருமையை “சந்திரயான் 3” விண்கலம் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் அடிப்படையில் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள “ஆதித்யா எல்-1” விண்கலத்தை, “பிஎஸ்எல்வி-சி 57” ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ராக்கெட் அடுத்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை.., மீறினால் கடும் நடவடிக்கை பாயும்!!!