நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு அறிவிப்புகளை தெற்கு ரயில்வே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி பட்டாசு மற்றும் வெடிக்கும் எரிபொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் மீறி ஒருவேளை இது போன்ற பொருட்களை ரயிலில் கொண்டு சென்றால் நிச்சயம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த போட்டோவில் இருப்பது பிரபல முன்னணி நடிகையா? என்ன இப்படி இருக்காங்க!!